தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா நோயாளிகளின் கண்ணீர் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவுமா.? வெளியான ஆராய்ச்சி முடிவுகள்.!

Corono patients tears can not spread corono virus

Corono patients tears can not spread corono virus Advertisement

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் மூலம் அவர்களிடம் இருந்து மறவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாது என்பது சிங்கப்பூரில் உள்ள தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் சளி, இருமல், தும்மல், வியர்வை மூலம் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறிவந்த நிலையில், அவர்களின் கண்ணீர் வைரஸை பரப்புமா என்ற ஆய்வில் இறங்கினர்.

corono

கொரோனா அறிகுறி கண்டறியப்பட்ட நாள் தொடங்கி குணமாகி சென்ற 20 நாட்கள் ஆன 17 நோயாளிகளின் கண்ணீரை சேமித்து, சிங்கப்பூரில் உள்ள தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை தொடங்கியது. ஒவொரு நிலையாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், கொரோனா நோயாளிகளின் கண்ணீர் மூலம் கொரோனா மற்றவர்களுக்கு பரவாது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், வைரஸ் பாதிக்கபட்டவர்கள் எச்சில், சளி மூலம் பரவுவது மட்டுமன்றி அவர்கள் ஏதேனும் மேற்பரப்பில் கை வைத்தால் கூட அங்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story