கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ஹாலந்து நாட்டு விஞ்ஞானிகள் தகவல்.!
Coronavirus, the cure comes from Holland
ஹாலந்து நாட்டில் உள்ள 10 ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு ஓன்று தற்போது பரவி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கொரோனா என்ற வைரஸ் குடும்பத்தில் முதல் 6 பிரிவுக்கு இவர்கள்தான் மருந்து கண்டுபிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பரவி வரும் 7 வது பிரிவுக்கும் தாங்கள் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அந்த ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கண்டுபிடித்த புதிய தடுப்பு மருந்தை எலியிடம் செலுத்தி சோதனை செய்ததாகவும், அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த சோதனை சர்வதேச அளவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் இந்த மருந்தை அதிகளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கிவிடும் எனவும் கூறப்படுகிறது.