×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா வைரஸின் உச்சகட்ட பதட்டம்! தண்ணீர் பாட்டிலை தலையில் அணிந்துகொண்டு உயிரைக் காப்பாற்ற துடிக்கும் மக்கள்!

coronavirus attack people

Advertisement

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிரமாக முயன்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனப் புத்தாண்டு விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சாலையில் சுருண்டு விழுந்து 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொரோனாவின் பாதிப்பால் கீழே விழும் நபர்களை அடுத்தவர்கள் காப்பாற்றக்கூட முன்வரவில்லை. 

இந்த வைரஸின் காரணமாக பயம் எற்பட்டு காப்பாற்ற முன்வராமல் சுற்றி நின்று மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். மேலும் மாஸ்க் கிடைக்காமல் தண்ணீர் பாட்டிலை தலையில் அணிந்துகொண்டு உயிரைக் காப்பாற்றி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Corono virus #china
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story