×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பசியில் அழுத குழந்தை! பாலூட்டிய அடுத்த நொடியே கோமாவிற்கு சென்ற தாய்! வெளியான மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!

coma stage mother feed child in arjendina

Advertisement

அர்ஜெண்டினா, கோர்டோபா சான்பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வந்தவர் மரியா பெர்ரேயரா. 2 வயது நிறைந்த இவருக்கு கடந்த மாதம் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சுயநினைவை இழந்து மரியா கோமாநிலைக்கு சென்றுள்ளார். 

அவருக்கு தொடர்சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சுயநினைவு திரும்பாததால் அவரது மூளை விரைவில் செயலிழக்க நேரும். எனவே அவரது உடல்உறுப்பை தானம் செய்யுங்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் அவரது கணவர் நம்பிக்கையை விடாமல் எனது மனைவிக்கு  சரியாகிவிடும் என தொடர்ந்து சிகிச்சை அளிக்க வற்புறுத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் மரியாவின் அருகே படுத்திருந்த குழந்தை பசித்து பால்கேட்டு அழுதுள்ளது. இந்நிலையில் கோமாவில் இருந்த தாய் குழந்தை பசியால் அழும் குரல் கேட்டு கண்விழித்துள்ளார். மேலும் தனது குழந்தையின் பசியாற்ற துவங்கியுள்ளார்.இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஆனால் தனது குழந்தையின் பசியை தீர்த்து விட்டு மரியா சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து மீண்டும் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனை கண்ட அவரது கணவர் மெய்சிலிர்த்து, எனது மனைவி விரைவில் குணமடைந்து விடுவார் என நம்பிக்கை வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை பசியால் அழும் சத்தம் கேட்டதும் கோமாவில் இருந்த தாய் எழுந்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#coma stage #feed milk #child crying
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story