நாய், பூனைகளையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்.! மரண பயத்தில் மாஸ்க் அணிந்து சுற்றும் செல்லப்பிராணிகள்..!
China dogs and cats walk with face mask
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 1700 கும் அதிகமான மக்கள் உயிர் இழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் சீனாவும் தவித்துவருகிறது.
சீனாவில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் முகத்தில் மாஸ்க் அணிந்து வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை காத்து வருகின்றனர். இந்நிலையில் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளையும் கொரோனா வைரஸ் தாக்கிவிடும் என்ற அச்சத்தில் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கும் மாஸ்க்குகளை அணிவித்து வருகின்றனர்.
நாய்களுக்கும் , பூனைகளுக்கும் மாஸ்க் அணிவித்து சாலைகளில் நடந்து செல்லும் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362