×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீனாவின் உளவு ரோபோ... எல்லையில் மனித உருவத்தை போல் நின்று உளவு பார்க்கும் ரோபோ! வைரல் வீடியோ!

இந்திய எல்லையில் சீன ரோபோட் சர்ச்சை பரவி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் உறுதி அளிக்காததால் சந்தேகம் அதிகரித்துள்ளது.

Advertisement

சீனாவின் எல்லைப் பகுதிகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், எல்லை நிர்வாகத்தில் ரோபோட்கள் பயன்படுத்தப்படுவதாக பரவும் காணொளி சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

எல்லைப் பகுதியில் ரோபோட்? பரவும் சர்ச்சை!

உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனா ‘உளவு ரோபோட்’ ஒன்றை நிறுத்தியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மலைப் பிரதேசத்தில் மனித உருவத்தை ஒத்த ஒரு பொருள் அமைதியாக நிற்பது போல் அந்த வீடியோவில் தோன்றுகிறது. இதனால், சீன ராணுவம் புதிய கண்காணிப்பு ரோபோட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக இணையவாசிகள் பலர் வாதிடுகின்றனர்.

இதையும் படிங்க: அடிஆத்தி... கன்னத்தில் குழியை உண்டாக்க! வாய் வழியே செய்யும் அறுவை சிகிச்சை! இணையத்தை அதிர வைத்த பெண்..!!!

ஆனால் இந்தக் காணொளியின் உண்மைத்தன்மை குறித்து இந்திய, சீன ராணுவத்தினர் இதுவரை எந்த உறுதியும் அளிக்கவில்லை. இது வெறும் ஒளிப்பிழை அல்லது கவனத்தை ஈர்க்க வைக்கப்பட்ட பொருள் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தாலும், சீனாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் Manav Robot தொழில்நுட்பங்களில் முதலீடு அதிகரித்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வியட்நாம் எல்லையில் மனித உருவ ரோபோட்கள்!

இந்திய எல்லையில் சர்ச்சை கிளம்பியிருக்க, வியட்நாம் எல்லைச் சோதனைச் சாவடியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மனித உருவ ரோபோட்களை நிறுவ சீனா திட்டமிட்டுள்ளது. ‘வாக்கர் எஸ்2’ எனப்படும் இவை ஷென்சென் யூபிடெக் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. மனித உதவியின்றி தானாகவே பேட்டரியை மாற்றும் திறன் கொண்ட உலகின் முதல் தொழில் தரத்திலான ரோபோட் என இது குறிப்பிடப்படுகிறது.

இந்த திறனால், ரோபோட்கள் எந்த இடையூறும் இல்லாமல் நீண்ட நேரம் செயல்பட முடியும். சுங்கச் சாவடிகள், தளவாடப் பணிகள், எல்லை கண்காணிப்பு போன்ற இடங்களில் இது முக்கிய நன்மை அளிக்கும் என சீனா எதிர்பார்க்கிறது. இந்த ரோபோட் குழுக்கள் டிசம்பர் 2025 முதல் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

தொழில்துறைப் பணிகளிலும் விரிவு

எல்லைப் பாதுகாப்பை மட்டுமல்லாமல், எஃகு, தாமிரம் உள்ளிட்ட தொழில்துறைகளின் ஆய்வுப் பணிகளிலும் இந்த ரோபோட்களை பயன்படுத்தும் திட்டம் சீனாவிடம் உள்ளது. ரோபோட்களை உபயோகித்து நீண்டகால தானியங்கி கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவது அதன் தேசியத் திட்டத்தின் முக்கிய பகுதி என குறிப்பிடப்படுகிறது.

மொத்தத்தில், சீனாவின் ரோபோட் பயன்பாடு தொடர்பான இந்த விவாதம் உலக நாடுகளின் கவனத்தை மீண்டும் எல்லைப் பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப போட்டிகளுக்கு திருப்பி உள்ளது.

 

இதையும் படிங்க: என்னம்மா இது.... ரயிலின் ஏசி பெட்டியில் கெட்டில் வைத்து பெண் ஒருவர் செய்த வேலையை பாருங்க! விவாதத்தை கிளப்பிய வீடியோ...!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#China Robot #இந்தியா எல்லை #AI ரோபோட் #border issue #Ubot Tech
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story