×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தையை வெளியே எடுக்கும்போது முறிந்த கால்கள்..! அரைகுறை டாக்டர்களால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!

Baby leg broken while delivery in Russia

Advertisement

பிரசவத்தின்போது குழந்தையின் கால்கள் முறிந்த சம்பவம் ரஷ்யா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டை சேர்ந்த நன்கு படித்த இளம் தம்பதி ஒருவர் வீட்டிலையே பிரசவம் பார்க்க ஆசைப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆசை படி, நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே இரண்டு மருத்துவச்சிகளை ஏற்பாடு செய்து வீட்டிற்கு வரவைத்து பிரசவம் பார்த்துள்ளனர். இதனிடையே பிரசவம் சற்று சிக்கலானதை அடுத்து குழந்தையின் கால்கள் வெளியே தெரிய தொடங்கியுள்ளது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போன மருத்துவச்சிக்கல் குழந்தையின் காலை பிடித்து இழுத்ததில் குழந்தையின் கால்கள் முறிந்துள்ளது. நிலைமையின் தீவிரத்தை அறிந்த அந்த பெண்ணின் கணவர் உடனே தனது மனைவி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். வெளியே வந்த குழந்தையின் கால்கள் நீல நிறமாக மாறியதை அடுத்து மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story