81 வயது மூதாட்டியை கற்பழித்த 51 வயது பராமரிப்பாளர்.. முதியோர் இல்லத்தில் பயங்கரம்.!
81 வயது மூதாட்டியை கற்பழித்த 51 வயது பராமரிப்பாளர்.. முதியோர் இல்லத்தில் பயங்கரம்.!
முதியோர் இல்லத்தில் மறதியால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க், சொசெஸ்டர் பகுதியில் ஷோர் விண்ட்ஸ நர்சிங் ஹோம் உள்ளது. இந்த முதியோர் இல்லத்தில் 50 க்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கின்றனர். இவர்களை பராமரிக்க ஆண் - பெண் பணியாளர்களும் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், முதியோர் இல்லத்தில் 81 வயதான மறதி நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தங்கியிருந்த நிலையில், அவரை 51 வயதான கட்கா பிரதான் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் குடும்பத்தினர் மூதாட்டியை காண சென்றபோது, அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதியோர் இல்லத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் விசாரணை செய்து, இறுதியாக குற்றத்தை செய்த கட்கா பிராதனை கைது செய்தனர். அவர் நான் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
அவரின் மீதான குற்றசாட்டுக்குள் உறுதி செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 10 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்தி ஜாமினில் வெளியாகியுள்ளார். அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362