×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிகார கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு... வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை.!

குடிகார கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு... வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை.!

Advertisement

சென்னை அருகே கணவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்ததால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 38; சென்னையில் காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். இவர் சத்திய பிரியா என்ற பெண்ணை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

குடிப்பழக்கத்திற்கு ஆளான மணிகண்டன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்து வந்திருக்கிறது. அவரது கொடுமைகளால் மனவிர்த்தியில் இருந்திருக்கிறார் சத்ய பிரியா.

நேற்று மாலை மீண்டும் குடித்துவிட்டு வந்த மணிகண்டன் தனது மனைவியுடன் தகராறு செய்ததால் ஒருத்தியின் உச்சத்திற்கே சென்ற சத்யப்பிரியா  புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு  இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #SriMushnam #dmesticviolence #wifesuicide #alcoholichusband
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story