×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயணிகள் பேருந்து மீது மோதிய சரக்கு லாரி..! 32 பேர் பரிதாப பலி.! 77 பேர் படுகாயம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!

accident in syria

Advertisement

சிரியாவில் டமாஸ்கசில் இருந்து ஹோம்ஸ் பகுதியை நோக்கி எரிபொருள் நிரம்பிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.  எரிபொருள் நிரம்பிய லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வந்த இரண்டு மிக பெரிய பயணிகள் பேருந்துகள் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதனை தொடர்ந்து வந்த 15 வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து மோதியுள்ளது.  இந்த சம்பவத்தில் பேருந்துகளில் பயணம் செய்த ஈராக் நாட்டை சேர்ந்த பயணிகள் உள்பட 32 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  77 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்துக்குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  சிரியா விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மீட்புக்குழுவினர். இச்சம்பவம் சிரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #syria
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story