×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாங்கிய கடனை தராமல் ஏமாற்ற... விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய பெண்... வினோத சம்பவம்...!!

வாங்கிய கடனை தராமல் ஏமாற்ற... விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய பெண்... வினோத சம்பவம்...!!

Advertisement

தாய்லாந்தில் எல் என்ற பெண் தனது தோழிக்கு தரவேண்டிய கடனை திருப்பி தராமல் ஏமாற்ற பெண்  இறந்துவிட்டதாக அறிவித்து நாடகமாடியுள்ளார். 

எல் என்ற அந்த பெண் தன்னுடன் வேலை பார்த்த மாயா என்ற பெண்ணிடமிருந்து ஒரு தொகை கடனாக வாங்கியுள்ளார். நவம்பர் 20-ஆம் தேதி அந்த பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால், சொன்னபடி பணம் தரமுடியாததால், டிசம்பர் 6-ஆம் தேதி கொடுப்பதாக அவகாசம் கேட்டிருந்தார்.

இந்நிலையில், மாயா எதேச்சையாக பேஸ்புக்கை பார்த்தபோது, எல் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக அவரது மகள் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். அதை பார்த்த மாயா அதிர்ச்சியடைந்தார். எல் தனது வீட்டிற்கு அருகில் ஒரு விபத்தில் எல் உயிரிழந்தார் என்றும் , அவரது உடல் 370 மைல் தொலைவில் இருக்கும் பண்டா ஆச்சே நகரில் அடக்கம் செய்யப்படும் என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட அவரது உடலின் படத்துடன் முகநூலில் இந்த பதிவு பகிரப்பட்டது. மற்றொரு புகைப்படம் மருத்துவமனையில் அவர் ஸ்ட்ரெச்சரில் கிடப்பது போல் இருந்தது. ஆனால், எல்லின் மகள், தனது தாயார் அவருடைய பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து அந்த பதிவை ஷேர் செய்ததாக, கூறியுள்ளார்.

இந்நிலையில், எல் தனது பணத்தை திருப்பிக்கொடுப்பார் என்று காத்திருப்பதாகவும், எனவே காவல்துறைக்கு செல்லவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்களில் பேசிய மாயா கூறியுள்ளார். ஆனால், அவர் எல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #thailand #Woman Dramatic died in an accident #Cheating by not paying the debt
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story