×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

14 வயது சிறுவனை பாலியல் வனப்புணர்வு செய்த 22 வயது ஆசிரியை.!

14 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த 22 வயது ஆசிரியை.!

Advertisement

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த மெலிசா மேரி கர்டிஸ் என்ற 31 வயது பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 14 வயதான ஒரு சிறுவனோடு பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டார்.

8 வருடங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் புகார் வழங்கியிருந்த சூழ்நிலையில், சென்ற மாதம் தான் காவல்துறையினர் அந்தப் புகார் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த ஆசிரியை அவருடைய காரில் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் அந்த மாணவரிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்திருக்கிறார். மேலும் அந்த சிறுவனுக்கு பல்வேறு போதை வஸ்துகளை வழங்கி, மயக்கி அந்த ஆசிரியை 14 வயது சிறுவனோடு பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் நடைபெற்றபோது அந்த ஆசிரியைக்கு 22 வயது தான் ஆகியிருந்தது என்றும் கூறப்படுகிறது.

சுமார் 20 முறைக்கு மேல் அந்த சிறுவனோடு பாலியல் ரீதியான  உறவு வைத்துக்கொண்டுள்ளார். காவல்துறையினரின்  விசாரணையில் இந்த உண்மை அனைத்தும் தெரிய வந்தவுடன், அந்த ஆசிரியைக்கு  எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதை தெரிந்து கொண்ட அந்த ஆசிரியை, தானாக முன்வந்து காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#U.S.A #America #teacher #student #sexual abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story