கனடாவில் இருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்த 4 இந்தியர்கள் கடும் பனியால் விறைத்து மரணம்.!
கனடாவில் இருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்த 4 இந்தியர்கள் கடும் பனியால் விறைத்து மரணம்.!
அமெரிக்காவின் வடக்கு எல்லையில் உள்ள மாகாணங்கள் மற்றும் கனடா நாடு கடுமையான பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் எமர்சன் எல்லைப்பகுதியில், வாகனத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேரின் சடலத்தை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மனிடோபா மாகாணத்தில் இருந்து அமெரிக்காவிற்கும் அவர்கள் நுழைய முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2 பெரியவர்கள், 1 நடுத்தர வயதுள்ளவர் மற்றும் 1 குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
எல்லைப்பகுதியை எளிதாக கடந்துவிடலாம் என எண்ணி அவர்கள் புறப்பட்டு இருக்கலாம் என்றும், ஆனால் -35 டிகிரி செல்ஸியஸ் குளிர் நிலவுவதால் அனைவரும் குளிரில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவின் இந்திய தூதர்கள் விளக்கம் அளிக்கவும் மத்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362