அதிர்ச்சி! காய்ச்சல், உயர்வு இரத்த அழுத்தம் மருந்துகளில் 239 பிரபல மருந்துகள் தரமற்றவை....! CDSCO வெளியிட்ட முழு லிஸ்ட்... மக்களே உடனே செக் பண்ணுங்க!!!
நாடு முழுவதும் விற்பனையான மருந்துகளில் 239 மருந்துகள் தரமற்றவை என்றும், ஒரு மருந்து போலியானது என்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு சோதனையில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனையாகும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய நடத்தப்பட்ட சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 1,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் 239 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.
1,000-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வு
மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நாடு முழுவதும் இந்த ஆய்வை மேற்கொண்டன. ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட மருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுதவிர, ஒரு மருந்து முற்றிலும் போலியானது என்றும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதையும் படிங்க: நீங்களே இப்படி செஞ்சா எப்படி? குழந்தைகள் கண் முன்னாடியே இரு பெண்கள் செய்த அந்த காரியம்.... சிசிடிவி-யில் சிக்கிய காட்சி!!!
காய்ச்சல், உயர் ரத்த அழுத்த மருந்துகளும் பட்டியலில்
தரமற்றதாக கண்டறியப்பட்ட மருந்துகளில் காய்ச்சல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் மருந்துகளின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் அவசியம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. தரமற்ற மருந்துகள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
CDSCO இணையதளத்தில் முழு விவரங்கள்
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முழுமையான விவரங்களையும், தரமற்றதாக கண்டறியப்பட்ட மருந்துகளின் பட்டியலையும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பான CDSCO தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மருந்து பயன்படுத்துவோர் அந்தப் பட்டியலை சரிபார்த்து, தாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.