பழைய சிம் கார்டு மூலம் ரூ.31 லட்சத்திற்கு தங்கம் எடுத்த நபர்! உடனே நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய உண்மை!!!
பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கம் எடுக்கப்பட்டதாக வைரலான வீடியோ உண்மைதானா? நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்கள் இங்கே.
பழைய சிம் கார்டுகள் குப்பையாக மாறும் இந்த காலத்தில், அவற்றிலிருந்து தங்கம் எடுக்கலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. ஒரு பிளாக்கர் வெளியிட்ட வீடியோ பலரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், அதன் உண்மை நிலை குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன.
வைரலான வீடியோவில் என்ன கூறப்பட்டது?
அந்த பிளாக்கர் ஆயிரக்கணக்கான பழைய சிம் கார்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளைச் சேகரித்து, அவற்றை சுத்திகரித்து தங்கம் பிரித்தெடுத்ததாக கூறினார். அவரது கணக்குப்படி, 191.73 கிராம் சுத்தமான தங்கம் கிடைத்ததாகவும், இதன் மதிப்பு இந்திய சந்தையில் சுமார் ரூ.31 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார்.
எப்படிப் பிரித்தெடுக்கப்பட்டது?
சிம் கார்டுகளைச் சிறு துண்டுகளாக உடைத்து, ஆசிட் மற்றும் பல ரசாயன கலவைகளில் கலந்து சுத்திகரித்ததாக அவர் விளக்கியுள்ளார். இதில் மின்சாரம் போன்ற ஆபத்தான முறைகளும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவதால், பலர் இதை முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: பெண்கள் விடுதியில் குவியலாக கிடந்த ஆணுறைகள்! உண்மையிலேயே நடந்தது என்ன? டெல்லியை அதிரவைத்த வீடியோ...
நிபுணர்கள் வெளியிட்ட உண்மை
இந்த வீடியோ வைரலான பிறகு, தொழில்நுட்ப நிபுணர்கள் ஒரு முக்கியமான உண்மையை வெளிச்சம் போட்டுள்ளனர். ஒரு சாதாரண சிம் கார்டில் மிகக் குறைந்த அளவில்தான் தங்கம் இருக்கும். 191 கிராம் தங்கம் பெற வேண்டுமெனில் சுமார் 4 லட்சம் சிம் கார்டுகள் தேவைப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்த வீடியோவில் கூறப்பட்ட அளவிலான தங்கம் உண்மையில் சாத்தியமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வைரல் வீடியோக்களை நம்புவதற்கு முன் அதன் பின்னணி உண்மைகளை சரிபார்ப்பது அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.