×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

50 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிய விமானம் கண்டுபிடிப்பு!. அதனுடன் படைவீரர் உடல்!.

50 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிய விமானம் கண்டுபிடிப்பு!. அதனுடன் படைவீரர் உடல்!.

Advertisement

 

50ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம், இமலயமலையில் உள்ள தாஹா பனிமலையில் அதன் உடைந்த பாகங்களும், விமானியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இமயமலைப்பகுதியின் லாஹுல் பள்ளத்தாக்கில் தாக்கா பனிப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இந்திய மலையேற்ற அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ் ராவத் என்பவர் தலைமையில் 11 பேர் சேர்ந்த குழு  இதை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.

 அப்போது பனிப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உடைந்த விமானத்தின் பகுதிகளும், அதன் அருகே மிகவும் அழுகிப்போன ஆண் ஒருவரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.

அது குறித்து ராஜீவ் ராவத் கூறுகையில், இங்கு கிடக்கும் உதிரி பாகங்கள் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-12 ரக விமானத்தின் உடைந்த பாகங்களாகும்.

இந்த விமானத்தில் அப்போது,98 பயணிகள் விமானிகள் உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 102 பயணிகள் பயணித்தனர். சண்டிகரில் இருந்து லே பகுதிக்கு இந்த விமானம் பறந்தபோது அப்போது மோசமான காலநிலையில் விபத்தில் சிக்கியது.

அதன்பின் நீண்ட ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2003-ம் ஆண்டு விமானத்தின் உடைந்த பாகங்களை தாஹா பகுதியில் கைப்பற்றினர். அதன்பின் இப்போது இந்த விமானத்தின் பாகங்களும் படைவீரர் ஒருவரின் உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#flight #accident #soldiers #body
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story