ஒரே நாளில் ₹77 கோடி வருவாய் ஈட்டி... அனைவரையும் வாயடைக்க வைத்த 26 வயது இந்திய இளைஞனின் மாஸ் சாதனை! IIT - யில் இருந்து மிரள வைத்த AI கருவி வரை...!!!
IIT கான்பூரில் படித்த 26 வயது இந்திய இளைஞர் சித்தார்த் சக்ஸேனா உருவாக்கிய Merlin AI கருவி உலக கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரே நாளில் ₹77 கோடி வருவாய் ஈட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
26 வயதிலேயே உலக தொழில்நுட்பத் துறையின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய இளைஞர் சித்தார்த் சக்ஸேனா, தன்னுடைய Merlin AI கருவியின் மூலம் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். ஒரே நாளில் சுமார் ₹77 கோடி வருவாய் ஈட்டியதாக அவர் பகிர்ந்த தகவல், ஸ்டார்ட்அப் உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
IIT-யில் இருந்து உலக AI சந்தை வரை
IIT கான்பூரில் கணினி அறிவியலில் B.Tech பட்டம் பெற்ற சித்தார்த் சக்ஸேனா, படிப்பை முடித்த பிறகு மெஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனங்களுடன் பணியாற்றினார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை விட IIT கான்பூரின் கணினி அறிவியல் பிரிவில் சேர்வது மிகவும் கடினம் என்று அவர் கூறியிருந்தாலும், அந்த சவாலை வெற்றிகரமாக கடந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிறப்பிலேயே கருப்பை இல்லாத பெண்! மருத்துவர்களே கைவிரித்த நிலை.... தற்போது பிறந்த ஆண் குழந்தை! உலகையே வியக்க வைத்த தாய்மை பயணம்!!!
வேலைவாய்ப்பில் மட்டும் நின்றுவிடாமல், தனக்கென ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 2022ஆம் ஆண்டு தனது IIT நண்பர்களான பிரத்யுஷ் ராய் மற்றும் சிரசேந்து சர்க்காருடன் இணைந்து Merlin நிறுவனத்தைத் தொடங்கினார். கூகுள் க்ரோம் உலாவியில் செயல்படும் AI Extension ஆக உருவாக்கப்பட்ட Merlin, உலகம் முழுவதும் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரே நாளில் ₹77 கோடி வருவாய்
சமீபத்திய பேட்டியில் பேசிய சித்தார்த், Merlin நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பிறகு ஒரே நாளில் சுமார் 8 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ₹77 கோடி வருவாய் கிடைத்ததாக தெரிவித்தார். தற்போது 5 கோடி டாலருக்கும் அதிகமான மதிப்பீட்டைக் கொண்ட நிறுவனமாக Merlin வளர்ந்திருப்பதாகவும் கூறினார்.
இளைஞர்களுக்கு அவர் கூறிய செய்தி
பெரிய வெற்றியை அடைய வழக்கமான சிந்தனைகளைத் தாண்டி அபாயங்களை ஏற்கும் மனப்பக்குவம் தேவை என்று சித்தார்த் வலியுறுத்தினார். இந்தியாவில் பலர் குறைந்த வளங்களுடன் வளர்வதால் பெரிய முடிவுகளை எடுக்க தயங்குவதாகவும், ஆனால் தெளிவான இலக்கும் துணிச்சலும் இருந்தால் செயற்கை நுண்ணறிவு துறையில் உலக அளவிலான நிறுவனங்களை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சித்தார்த் சக்ஸேனாவின் பயணம், இந்திய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், உலக தொழில்நுட்ப சந்தையை மாற்றும் புதுமை நிறுவனங்களை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.