×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னால் சென்ற டூ-வீலர் மீது பயங்கரமாக மோதிய லாரி..! தலை நசுங்கிய வாலிபர் பரிதாப சாவு

முன்னால் சென்ற டூ-வீலர் மீது பயங்கரமாக மோதிய லாரி!,..தலை நசுங்கிய வாலிபர் பரிதாப சாவு

Advertisement

மதுரையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை பொன்மேனி நேரு நகர் பகுதியில் வசித்துவருபவர் ஆரோக்கியராஜ். இவர் நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் சம்மட்டிபுரம் பகுதியில் இருந்து காளவாசல் புறவழிச் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, அவரது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் ஆரோக்கியராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, லாரியின் பின்புற சக்கரம் ஆரோக்கியராஜின் தலையில் ஏறியதில் அவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், ஆரோக்கியராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை காரணமான லாரி ஓட்டுநர் பிரபுவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Road accident #Lorry with Two wheeler #Rajaji govt hospital #madurai #police investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story