×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலிக்க மறுத்த 10 ஆம் வகுப்பு மாணவி.. பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!

தன்னை காதலிக்க மறுத்த 10ஆம் வகுப்பு மாணவியின் முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இள

Advertisement

தன்னை காதலிக்க மறுத்த 10ஆம் வகுப்பு மாணவியின் முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்து உள்ள அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (24).இவர் வாடகை கார் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் அதே பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

அடுமட்டுமின்றி அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி செந்தரவு செய்து வந்துள்ளார் நாகராஜ். ஆனால் அதற்கு மாணவி மறுத்து வந்த நிலையில் நாகராஜ் மாணவியிடம் தன்னை காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசி விடுவதாக மிரட்டியுள்ளார்.

அதனையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Throw acid #10 th class girl #young boy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story