×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!

சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!

Advertisement

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சி மணக்காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மூத்த மகன் அருணாச்சலம், இளைய மகன் காசி. இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய தோட்டத்தில் கொட்டகை அமைத்த காசி, அதற்காக மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்துள்ளார்.இதில், மின் இணைப்பு வழங்குவதற்கு அண்ணன் அருணாச்சலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தம்பி காசி, அண்ணன் அருணாச்சலத்தை கத்தியால் கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளார்.இதில், பணத்தை காயம் அடைந்த அருணாச்சலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தம்பி காசி மற்றும் அவரது உறவினர் பீமன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#family problem #Crime #death #Murder #Land problem
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story