×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து குழந்தையை காட்டில் வீசிச் சென்ற இளம்பெண்.! குழந்தையை உயிருடன் மீட்ட போலீசார்.!

பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து குழந்தையை காட்டில் வீசிச் சென்ற இளம்பெண்.! குழந்தையை உயிருடன் மீட்ட போலீசார்.!

Advertisement

பெரம்பலூர் அடுத்துள்ள எசனை கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி மனைவி ஷோபனா. கணவர் பிரிந்து சென்றதால் ஷோபனா தனது 20 வயது நிரம்பிய மகளுடன் உதகையில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் ஷோபனாவின் மகளுக்கும் அவரது வீட்டருகே வசிக்கும் வாலிபருக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் ஷோபனாவின் மகள் கர்பமாகியுள்ளார்.

ஆனால் தான் கர்ப்பமாக இருப்பதை ஷோபனாவின் மகள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு பிரசவ வலி வந்ததால் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை உயிரிழந்து விட்டதாக நினைத்த அவர் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாய் சோபனா, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்களுக்கு பிரசவம் நடைபெற்றது தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவா்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலீசாரிடம் அப்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில், காட்டுப் பகுதிக்கு சென்றபோது குழந்தை உயிருடன் இருந்தது தெரிய வந்தது. பின்னர் குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இதுதொடர்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#newborn #young girl
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story