×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண்.! பரிதாபமாக போன உயிர்.! அதிர்ச்சி காரணம்.!

புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷம் குடித்த பெண்.! பரிதாபமாக போன உயிர்.! அதிர்ச்சி காரணம்.!

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி தீப லட்சுமி. 35 வயது நிரம்பிய இவர் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பண முதலீடு திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதில் அவருக்கு கமிஷன் தொகை வருமானமாக வந்துள்ளது.

தனியார் நிறுவன முதலீடு திட்டத்தில் தீப லட்சுமி ஏராளமான வாடிக்கையாளர்களை சேர்த்து விட்டுள்ளார். இதில் வாடிக்கையாளர்களுக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் பணம் முதலீடு செய்தவர்கள், தீபலட்சுமியிடம் தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனையடுத்து தீபலட்சுமி தனியார் நிறுவனத்திடம் கமிஷன் தொகையை கேட்டபோது அவா்கள் கொடுக்காமல் இருந்துள்ளனர்.

பணம் முதலீடு செய்தவர்கள், தீபலட்சுமியிடம் தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி மாலை தீப லட்சுமி விஷம் குடித்து மயங்கினார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீபலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Women #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story