×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மச்சினியை மயக்க மாந்திரீகம்: அக்காள் கணவர் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்..!

மச்சினியை மயக்க மாந்திரீகம்: அக்காள் கணவரின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்..!

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம், பூங்குளம் அருகேயுள்ள செட்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23) இவரது மனைவி அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (21).  இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டதால், 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜேஷ்க்கு தனது மனைவியின் 19 வயது தங்கையின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 27 ஆம் தேதி இரவு நேரத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த மனைவியின் தங்கையை வழிமறித்து அவர் மீது திரவம் ஒன்றை வீசியுள்ளார். இதனை ஆசிட் என நினைத்த அந்த பெண் அதிர்ச்சியில் கூச்சல் போட்டுள்ளார்.

இதன் காரணமாக ராஜேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இளம்பெண்ணின் அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மீது ஊற்றப்பட்டது ஆசிட் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து  அவர் ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், ராஜேஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மனைவியின் தங்கை மீது காதல் வசப்பட்டு அவரை மயக்கி வசியம் செய்ய மந்திரித்த தண்ணீரை ஊற்றியதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ராஜேஷை திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tirupattur District #Young women #Enchanted water #police arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story