5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்! பெற்றோரிடம் குமுறிய சிறுமி!
young man try to abuse child
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு நேற்று திடீரென தனக்கு கடுமையான உடல்வலி என அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் அந்த சிறுமி. இதனையடுத்து அந்த சிறுமியிடம் அவரது பெற்றோர்கள் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறுமி அவரது பெற்றோர்களிடம் கூறுகையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகே தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (30) என்பவர் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர்கள் அளித்த புகாரின்பேரில் உதயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா ஒருபக்கம் வாட்டி வதைக்கிறது. இந்த சமயத்தில் இதுபோன்ற கொடூரர்களின் செயல் வேதனையடைய செய்கிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362