×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலியின் அம்மாவிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியது ஏன்? வாக்குமூலம் கொடுத்த இளைஞன்!

young man send photo to lover mom

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே இருக்கும் ஒசரவினை பகுதியை சேர்ந்த இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2018-ம் ஆண்டு செவிலியராக பணி செய்து வந்தார். அப்போது அவருக்கும், அழகியபாண்டியபுரம் காட்டுப்புதூரை சேர்ந்த தனேஷ் என்பவருக்கும் முகநூல் வழியாக காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்த போது, கடந்த ஆண்டு ஜுன் மாதம் அந்த பெண் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு தனேஷ் மிரட்டி வந்துள்ளார். 

அப்படி பணம் தராவிட்டால், தனிமையில்போது எடுத்து கொண்ட ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார் தனேஷ். இதுகுறித்து தகவலறிந்த இளம்பெண்ணின் தாய் தனேஷ் மீது காவல்நிலையத்தில்புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தனேஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும் அந்த பெண்ணும் நெருங்கி பழகினோம். எங்கள் விவகாரம் பெண்ணின் தாய்க்கும் தெரியும். ஆனால் அந்த பெண்ணை தற்போது வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க போவதாகவும் கூறினார்கள். 

அதனால்தான் என்னுடன் பழகிய நாட்களில் நாங்கள் எடுத்து கொண்ட வீடியோ, புகைப்படங்களை மார்ப்பிங் செய்து அந்த பெண்ணின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தேன். அதனை அந்த பெண் கண்டுகொள்ளவில்லை, அதனால்தான் அந்த புகைப்படங்களை அப்பெண்ணின் தாய்க்கும் அனுப்பினேன் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arrest #send photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story