×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருமகனை கண்டித்த மாமியார்... ஆத்திரத்தில் மருமகன் செய்த வெறி செயல்... ஆம்பூர் அருகே பரபரப்பு!!

மருமகனை கண்டித்த மாமியார்... ஆத்திரத்தில் மருமகன் செய்த வெறி செயல்... ஆம்பூர் அருகே பரபரப்பு!!

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்ன வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் பிரேம் குமார் - உஷா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் பிரேம் குமார் மற்றும் உஷா தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் உஷா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிரேம் குமார் உஷாவின் வீட்டிற்கு சென்று தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உஷாவின் தாய் ஹேமாவதி தனது மருமகனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குமார் மாமியார் என்று கூட பார்க்காமல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஹேமாவதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியான பிரேம் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thirupathur #mother in law #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story