பூட்டிய வீட்டிற்குள் திடீரென கேட்ட அலறல் சத்தம்... ஓடி சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... போலீசார் விசாரணை!!
பூட்டிய வீட்டிற்குள் திடீரென கேட்ட அலறல் சத்தம்... ஓடி சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... போலீசார் விசாரணை!!
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் சையது - சாய்தாபேகம் தம்பதியினர். இந்நிலையில் கடந்த 15 தேதி அன்று வீட்டில் தனிமையில் இருந்த சாய்தாபேகம் திடீரென அலறி கூச்சல் போட்டுள்ளார்.
சாய்தாபேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது இளைஞர் ஒருவர் முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி வீட்டின் ஓடுகளை பிரித்து கொண்டு அரிவாளுடன் தப்பி சென்றுள்ளார். அதனையடுத்து அங்கிருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கு வெட்டு காயங்களுடன் சாய்தாபேகம் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் சாய்தாபேகத்திடம் விசாரணை மேற்கொண்டதில், மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்த ஜோசப்ராஜ்(எ) மணிகண்டன்(24) என்பவர் தான் சாய்தாபேகத்தை வெட்டியது தெரியவந்தது.
சாய்தாபேகத்தின் மூத்த மகளை ஜோசப் காதலித்து வந்த நிலையில் சாய்தாபேகம் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த ஜோசப் சாய்தாபேகமை வெட்டியுள்ளார். இதையடுத்து ஜோசப்ராஜை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சாய்தாபேகம் இறந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362