×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமானதை மறைத்து இளம் பெண்ணிடம் பழகிய இளைஞர்... காரில் தனிமையில் அழைத்து சென்று நிகழ்த்திய கொடூரம்... கதறும் குடும்பத்தினர்!!

திருமணமானதை மறைத்து இளம் பெண்ணிடம் பழகிய இளைஞர்... காரில் தனிமையில் அழைத்து சென்று நிகழ்த்திய கொடூரம்... கதறும் குடும்பத்தினர்!!

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம், மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா (26). இவர் தனது கல்லுாரிப் படிப்பை முடித்துள்ள நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்காக தஞ்சாவூரிலுள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படித்து வந்திருக்கிறார். அதற்காக தினமும் மேல உளூரிலிருந்து தஞ்சாவூருக்கு தனியார் பேருந்து ஒன்றில் சென்று வந்துள்ளார்.

அப்போது தனியார் பேருந்து ஓட்டுனர் நாகராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. நாளடைவில் அப்பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆனால் நாகராஜ்க்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அதனை மறைத்து அகல்யாவிடம் பழகி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் அகல்யாவுக்கு, நாகராஜ் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்துள்ளது. இருந்த போதிலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாகராஜை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் நாகராஜ் காதலி அகல்யாவை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி அகல்யாவை காரில் தனிமையில் அழைத்து சென்று ஆள் இல்லாத காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்து விட்டு வடசேரி வாய்க்காலில் போட்டுவிட்டு சென்றுள்ளார். இதற்கிடையில் மகளை காணாததால் அதிர்ச்சியடைந்த அகல்யாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். 

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு அகல்யாவின் உடல் கிடைத்ததை அடுத்து அவரின் செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அதில் அகல்யா கடைசியாக நாகராஜ் என்பவருடன் பேசியது தெரியவந்துள்ளது. அதனையடுத்து போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாகராஜ் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanjavur #Murder #young man #college girl
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story