×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடுரோட்டில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நடுரோட்டில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Advertisement

மதுரை மாவட்டம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். கூலி தொழிலாளியான இவர் கோவை துடியலூர் அடுத்த பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் டீ குடிக்க சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேசை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே ஜெய்கணேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த துடியலூர் போலீசார் உயிரிழந்த ஜெய்கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என பல்வேறு காரணங்களின் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Covai #madurai #Crime #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story