×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணத்திற்க்காக சொந்த சித்தப்பாவை கடத்தி பணம் பறித்த இளைஞர்.! அதிர்ச்சி சம்பவம்.!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் பகுதியை சேர்ந்த முகமது ரியாசுதீன் என்பவருக்கும் அவர

Advertisement

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் பகுதியை சேர்ந்த முகமது ரியாசுதீன் என்பவருக்கும் அவரது அண்ணன் மகன் நஸ்ருதீனுக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ரிஸ்வானா என்ற பெண், ரியாசுதீனுக்கு சொந்தமான இடத்தை வாங்கி கொள்வதாகவும், இதனால் அவரது இடத்தை பார்வையிட வேண்டும் எனக்கூறி நேரில் வருமாறு அழைத்துள்ளார்.

இதனையடுத்து நேரில் சென்று அவரது இடத்தை பார்த்தபோது ரியாசுதீனின் இடம் பிடித்துள்ளது என்று கூறி, நீங்கள் காரில் என்னுடன் வந்தால் தனது கணவரிடம் முன்பணம் வாங்கித் தருவதாக கூறினார். அதை நம்பிய ரியாசுதீன் காரில் சென்றுள்ளார். அப்போது காரை வழிமறித்த இளைஞர்கள் மூன்று பேர் ரியாசுதீனை தாக்கி அவரை கட்டாயப்படுத்தி அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பிக் கொண்டுள்ளனர். மேலும் பணம் தரவேண்டும் இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.

சுதாரித்துக்கொண்ட ரியாசுதீன் வாகன பதிவு எண்ணை குறித்துக் கொண்டு வாகன முகவரி மற்றும் உரிமையாளர் பற்றி விசாரித்தபோது அது நஸ்ரூதினுக்கு சொந்தமானது என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் நஸ்ரூதின் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kidnapped #young boy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story