×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்! அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

young man arrested for young girl pregnant

Advertisement

தமிழகத்தில் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், சமீப காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்திரவதைபடும் கொடிய சம்பவமும் நடந்து வருகிறது. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஏம்பலில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில் புதுக்கோட்டையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையைச் சேர்ந்த ராஜகோபால் என்ற இளைஞன் திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி ராஜகோபால் கர்ப்பமாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் ராஜகோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த சிறுமியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arrest #young girl #praganant
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story