×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

young man arrest for haraasment

Advertisement


சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் இருந்த செல்போன், பணம் ஆகியவற்றுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பொலிசாரின் விசாரணையில், மாணவி பாலவாக்கத்தில் உள்ள அவரது உறவினரான கபிலன் என்பவருடன் தங்கியிருப்பது தெரிந்தது.

இதனையடுத்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த மாணவியை கபிலன் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று பாலவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது

இதையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக 20 வயது நிரம்பிய கபிலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arrest #harasment #young girl
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story