×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நட்பாக பழகி வந்த இளம்பெண்.! ஏமாற்றி வாலிபர் செய்த கேடுகெட்ட காரியம்!! அதிரவைக்கும் சம்பவம்!!

நட்பாக பழகி வந்த இளம்பெண்.! ஏமாற்றி வாலிபர் செய்த கேடுகெட்ட காரியம்!! அதிரவைக்கும் சம்பவம்!!

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். அவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியை சேர்ந்த 22 வயது சுரேந்தர் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அதனை பயன்படுத்தி அந்த இளைஞர் இளம்பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து அவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர் நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் அந்த ஆபாச புகைப்படங்களை உனது உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் எனவும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் அந்த பெண் உடல் நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கே சென்றுள்ளார். பிறகும் சுரேந்தர் விடாமல் அந்த பெண்ணிற்கு போன் செய்து,  நீ சென்னைக்கு உடனே வர வேண்டும். இல்லையென்றால் புகைப்படங்களை அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

மேலும் அண்மையில் சில புகைப்படங்களையும் செல்போன் மூலம் அவரது உறவினருக்கு அனுப்பியும் வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சென்னையில் உள்ள சுரேந்தரை கைது செய்து ஒரத்தநாடு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Abuse #chennai #Office friend
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story