திருமணமான 4 மாதத்திலேயே கணவனின் கொடுமை தாங்காமல் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்...
திருமணமான 4 மாதத்திலேயே கணவனின் கொடுமை தாங்காமல் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்...
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவரின் மகள் சவுந்தர்யா. இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு கோவை சேர்ந்த உறவுக்கார பையனான மனோகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மனோகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். திருமணம் ஆன நாள் முதல் சவுந்தர்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து தனது தாய் மஞ்சுளாவிடம் கூறி அழுதுள்ளார் சவுந்தர்யா. நியாயம் கேட்டு சென்ற மஞ்சுளாவையும் கடுமையாக தாக்கியுள்ளார் மனோகர்.
உடனே இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையம் வந்து கடந்த 2 மாதங்களாக புகார் அளித்து வந்துள்ளனர். ஆனால் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த சவுந்தர்யா இன்று காலை தனது தாயாருடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி கொண்டு தீ குளிக்க முயன்றுள்ளார் சவுந்தர்யா. உடனே அங்கிருந்த பாதுகாப்பு துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362