×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே.. இதற்காகவா இப்படி?? ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை.! காரணம் தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க.!

அடக்கடவுளே.. இதற்காகவா இப்படி?? ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை.! காரணம் தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க.!

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலை அடுத்துள்ள திருக்கச்சூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா, நிரோஷா என இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் 20 வயது நிறைந்த நிரோஷா தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் அவர் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது திருமால்பூரில் இருந்து கடற்கரை நோக்கி சென்றுகொண்டிருந்த விரைவு மின்சார ரயில் முன் நிரோஷா  திடீரென பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், புடவை சண்டையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நிரோஷா கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

அதற்காக அவர் தனது அக்காவின் புடவையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்காக அக்கா பவித்ரா, நிரோஷாவை கடுமையாக திட்டியுள்ளார். அதனால் நிரோஷா மன உளைச்சல் அடைந்து காணப்பட்டுள்ளார். பின்னரே மறுநாள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #girl #saree
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story