×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாய்பேச இயலாத இளம்பெண் 3 பேர் கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்.. வீடு புகுந்து துணிகரம்.. தமிழகமே அதிர்ச்சி..!

வாயில்லாத பெண்ணை கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்த காமுகர்கள்,..கொத்தாக தூக்கிய மேல்மருவத்தூர் போலீசார்..!

Advertisement

வாய்பேச முடியாத இளம் பெண்ணை வீடுபுகுந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ளரு கிராமத்தை சேர்ந்த 28 வயது இளம் பெண்ணுக்கு வாய் பேசமுடியாது. மேலும் அவர் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி என தெரிகிறது. இதனால் வேலை எதுவும் செய்ய முடியாமல் அந்தபெண் வீட்டில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றதால் அந்த பெண் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த வீட்டுக்குள் புகுந்த 3 இளைஞர்கள், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த பெண்ணால் வாய்ப்பேச முடியாததால் அக்கம்பக்கத்தினரை கூட உதவிக்கு அழைக்க முடியாமல் தவித்துள்ளார்.

இதற்கிடையில், வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளின் ஆடைகள் கலைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், பேச முடியவில்லை என்றாலும் பெற்றோரிடம் நடந்தவற்றை குறித்து கை சாடையில் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சித்தாமூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (33), அஜய் (24), ராமநாதன் (20) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Melmaruvathur #Chengalpet #Sexual Harassment #police arrest
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story