×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பைக் ஓட்ட ஆசையா இருக்கு என்று கூறிய இளம்பெண்! பரிதாபமாக நடந்த சோக சம்பவம்!

young girl died in bike accident

Advertisement


சென்னை குன்றத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு இளம்பெண் ஒருவர் பலியாகியிருப்பதாக போலீசாருக்கு  தகவல் வந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண்ணிற்கு அருகே படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒரு இளைஞரையும்  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து போலீசார் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, படுகாயமடைந்த இளைஞர் 21 வயது நிரம்பிய அண்ணாமலை என்றும், உயிரிழந்த இளம்பெண் 20 வயது நிரம்பிய அபிநயா என்பதும் தெரியவந்தது.

தனியார் ஷோரூமில் வேலை செய்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்டபட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அபிநயா வேலையை விட்டு நின்றுவிட்டார். இந்த நிலையில் சம்பள பாக்கி இருப்பதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார் அபிநயா. பின்னர் குன்றத்தூரில் இருசக்கர வாகனத்தில் காத்துக்கொண்டிருந்த அண்ணாமலையிடம், பைக் ஓட்ட கற்று தருமாறு கூறியுள்ளார்.

அப்போது அபிநாயாவிடம் தனது பைக்கை கொடுத்துவிட்டு பின்னால் அமர்ந்துள்ளார் அண்ணாமலை. பைக்கை ஓட்டிச்செல்லும்போது நிலைதடுமாறிய அபிநயா, அங்கிருந்த தடுப்பு சுவற்றில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தூக்கி வீசப்பட்ட அண்ணாமலை பலத்த காயமடைந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bike accident #young girl
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story