தோழிகளுடன் மொட்டைமாடியில் விளையாடிய சிறுமி.! திடீரென தவறி விழுந்ததால் ஏற்பட்ட சோகம்.!
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4-வது மாடியில் வசித்து வ
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4-வது மாடியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ரவிச்சந்திரனின் மகள் அக்ஷயா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அக்ஷயா, தனது வீட்டின் மொட்டை மாடியில் சக தோழிகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அக்ஷயா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அக்ஷயாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362