×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் முடிந்த 7 நாட்களில் கணவனுடன் சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்! கதறி அழும் பெற்றோர்.

Young girl dead in road accident after her marriage

Advertisement

விழுப்புறம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்து உள்ள மாதவச்சேரி என்னும் பகுதியை சேர்ந்தவர் இன்ஜினியரான பாலமுருகன். இவருக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 7 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் கள்ளக்குறிச்சியை நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். வாகனம் அம்மன் நகர் என்னும் பகுதியை நெருங்கியபோது இவர்கள் மூவரும் சென்ற வாகனம் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பலமாக மோதியுள்ளது.

இதில் நிலை தடுமாறி பிரியதர்ஷினி சாலை நடுவே விழுந்ததில் பின்னே வந்த லாரி அவர் மீது எறியுள்ளது. இதில் பிரியதர்ஷினி சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சாலை ஓரமாக விழுந்ததில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்னனர்.

திருமணம் முடிந்து 7 நாட்களில் புது பெண் விபத்தில் இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #bike accident
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story