தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்பதகராறில் மின்சார ரெயில் முன்பாய்ந்து இளம்பெண் தற்கொலை...

குடும்பதகராறில் மின்சார ரெயில் முன்பாய்ந்து இளம்பெண் தற்கொலை...

Young girl committed suicide in electronic train Advertisement

பெரவள்ளூரை சேர்ந்தவர் நாகராஜன் - ஜோதி சுகன்யா தம்பதியினர். இந்நிலையில் இன்று காலை ஜோதி சுகன்யா வீட்டில் உள்ளவர்களிடம் ஏடிஎம் மில் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு வெளியே சென்றுள்ளார்.

இந்த நிலையில் பெரம்பூர் லோகோ ரெயில் நிலையம் அருகே வந்த அவர் திடீரென அரக்கோணத்தில் இருந்த சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலில் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Perambalur

அதில் ஜோதி சுகன்யா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்றவர்கள் இச்சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த ரெயில்வே போலீசார் ஜோதி சுகன்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜோதி சுகன்யா குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில் குடும்ப தகராறில் ஜோதி சுகன்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் ஜோதி சுகன்யா கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Perambalur #electric train #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story