×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய்மாமாவோடு இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், இளம்பெண் செய்த காரியம்! அறைக்குள் மாப்பிள்ளை கண்ட அதிர்ச்சி காட்சி!

Young girl commits suicide while get married today

Advertisement

சென்னை முகப்பேர், காளமேகம் சாலைப் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரவியின் மனைவி உயிரிழந்துவிட்டார்.  அதனை தொடர்ந்து ரவி அவரது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 

 இந்நிலையில் ரவியின் அக்கா மல்லிகாவின் மகள் திவ்யா. 27 வயது நிறைந்த இவர் கடந்த 3 மாதமாக அவரது தாய்மாமாவான ரவியின் வீட்டில் தங்கி, தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவி உயிரிழந்த நிலையில், தனது குழந்தைகளுடன் தனியாக கஷ்டப்பட்டு வந்த ரவிக்கு திவ்யாவை இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க அவரது பெரியோர்கள் முடிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களது திருமணத்தை இன்று  வீட்டிலேயே மிகவும் எளிமையாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் திவ்யா வீட்டின் அறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரவி, உடனே கதவை உடைத்து உள்ளே சென்று திவ்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் கதறி துடித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் தனது மாமாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #marriage #nurse
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story