×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீண்ட நேரமாக அறையிலிருந்து வெளியே வராத மகள்! கதவை திறந்த பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சோக சம்பவம்!

Young girl commits suicide for mother scolding

Advertisement

திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே  சத்தரை கிராமத்தில் வசித்து வந்தவர் தமிழரசு. இவரது மகள் ரோகிதா. 20 வயது நிறைந்த அவர் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பகுதியில்  தனியார் நிறுவனம் ஒன்றில்  பணிபுரிந்து வந்துள்ளார்.

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருக்கும் நிலையில்  ரோகிதா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் மகள் ரோகிதா எழுந்து வராததால் அவரது தந்தை அறைக்குச் சென்று பார்த்துள்ளார்.அங்கு ரோகிதா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட அவரது பெற்றோர்கள் கதறி துடித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரோகிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரோகிதா நீண்ட நேரமாக செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

இதை கண்ட அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால்  மனவேதனை அடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #Talking phone
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story