×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடியால் வந்த வினை... கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவி எடுத்த விபரீதம் முடிவு... தூத்துக்குடியில் அதிர்ச்சி.!

குடியால் வந்த வினை... கணவரின் குடிப்பழக்கத்தால் மனைவி எடுத்த விபரீதம் முடிவு... தூத்துக்குடியில் அதிர்ச்சி.!

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரின் தொடர் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இளம் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பொண்ணு  இவரது மனைவி  விஜயலட்சுமி(20) இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ராஜா பொண்ணு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. மேலும் அவரது குடிப்பழக்கத்தால் அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம்  தனது வியாபாரத்தில் கிடைத்த பெரும் பகுதி  வருமானத்தில் மது குடித்துவிட்டு வீடு திரும்பி இருக்கிறார் ராஜ பொண்ணு. இது தொடர்பாக அவருக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கு இடையே  சண்டை நடந்திருக்கிறது. அதன் பிறகு தனது மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றிருக்கிறார் ராஜ பொண்ணு.

இதனைத் தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்து அவரது மனைவி விரத்தியில்  சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து  விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Tuticorin #alcoholichusband #wifesuicide #policeenquiry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story