×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவை விட கொடூரம்! திருமணமான 1 ஆண்டிலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்! வெளியான பகீர் காரணம்!

Young girl commit suicide for work stress

Advertisement

ஊட்டியை சேர்ந்தவர் ஹரிகணேஷ். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ஹரிகணேஷ் அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியிலும், பிரியதர்ஷினி நுங்கம்பாக்கத்தில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றிலும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த தம்பதியினர் ஆற்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.

மேலும் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹரிகணேஷ் மற்றும் பிரியதர்ஷினி இருவரும் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இரவு பணிபுரிந்து கொண்டிருக்கும்போது பிரியதர்ஷினி தனது கணவரிடம் உதவி கேட்டுள்ளார்.ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பிரியதர்ஷினி கோபித்துக்கொண்டு தனியாக வேறு அறைக்கு உறங்க சென்றுள்ளார். 

பின்னர் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால்,  சந்தேகமடைந்த ஹரிகணேஷ் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பிரியதர்ஷினி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரியதர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவரது கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பிரியதர்ஷினி வேலைப்பளுவின் காரணமாக மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #chennai #Work stress
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story