19 வயசுதான் ஆகுது..!! அதுக்குள்ள இப்படி அவரச பட்டுட்டியேம்மா!! கல்விக்கடன் கிடைக்காத விரக்தியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..
கல்வி கடன் கிடைக்காத விரக்தியில் இளம் கல்லூரி மாணவி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்
கல்வி கடன் கிடைக்காத விரக்தியில் இளம் கல்லூரி மாணவி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பக்குளம் தேவிநகரை சேர்ந்தவர்கள் காசிராஜன் - செல்வராணி தம்பதி. இவர்களது மகள் தாரணி (19). சில காரணங்களால் காசிராஜன் தனது மனைவி மற்றும் மகளை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனி ஆளாக கஷ்டப்பட்டு தனது மகளை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார் செல்வராணி.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அழகுக்கலை தொடர்பான படிப்பு படித்துவந்த தாரணி கல்லூரி கட்டணமாக சுமார் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டி இருந்தது. இவ்வளவு பெரிய தொகையை தன்னால் தர இயலவில்லை என தாயார் கைவிரித்தநிலையில், வங்கியில் கல்வி கடன் வாங்க முயற்சி செய்துள்ளார் தாரணி.
அதற்காக தனியார் ஏஜென்சி ஒன்றின் விளம்பரத்தை பார்த்து, அவர்களை அணுகியுள்ளார். அவர்களோ ல்விக்கடன் வாங்கி தருவதற்கும், பல்வேறு ஆவணங்களை தயார் செய்வதற்கும் தாரணியிடம் இருந்து பல்வேறு தவணைகளில் 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர்.
ஆனாலும் தாராணிக்கு கல்வி கடன் கிடைக்கவில்லை. தனியார் ஏஜென்சியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்களும் தர மறுத்துவிட்டனர். இதனிடையே கல்லூரி கட்டணத்தை செலுத்தும்படி கல்லூரியில் இருந்து அழுத்தம். இப்படி பல்வேறு காரணங்களால் மனஉளைச்சலில் இருந்த தாரணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362