×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உதயநிதி மாமா.. இந்தாங்க காசு.. சாப்பாடு இல்லாதவங்களுக்கு வாங்கிக்கொடுங்க.! நெகிழவைத்த 6 வயது சிறுமி.!

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாள

Advertisement

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்திற்கு சென்று உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில்பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், திருவல்லிக்கேணி சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெரு பகுதியில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கிய போது செந்தில்குமார்-பூர்ணிமா தேவி தம்பதியின் 6 வயது மகள் கலையரசி தனது உண்டியல் பணத்தை கொரோனா ஒழிப்பு பணிக்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உதயநிதியிடம் வழங்கினார். இந்தநிலையில், நிவாரண நிதி வழங்கிய அவருக்கு என் அன்பும் நன்றியும் என உதயநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#udhayanithi #child
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story