எல்லோரும் இருந்தும் நான் தனிமை.. ப்ளீஸ் எனது உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர்கள்.! இளைஞரின் விபரீத முடிவு.!
எல்லோரும் இருந்தும் நான் தனிமை.. ப்ளீஸ் எனது உடலை பிரேத பரிசோதனை செய்யாதீர்கள்.! இளைஞரின் விபரீத முடிவு.!
கேரள மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் என்பவர் சென்னை ராமாபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். 23 வயது நிரம்பிய இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அர்ஜூன், தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அர்ஜூன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அர்ஜுனின் அறையை சோதனை செய்தபோது அவர் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
அர்ஜுன் அந்த கடிதத்தில், எனக்கு வாழ பிடிக்கலை. எல்லோரும் இருந்தும் நான் தனியாகத்தான் இருக்கிறேன். அதனால் நான் சாகப்போகிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய கடைசி ஆசை, என்னுடைய உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அப்படியே எனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362