×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாருக்கும் இப்படி ஒரு மரணம் வரவே கூடாது!! 10 வயது சிறுவன்.. லாரி டயர் கழண்டு ஓடி மோதியதில் பரிதாப பலி..

லாரியின் டயர் கழண்டுசென்று மோதியதில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்த 10 வயது சிறுவன் உயிர

Advertisement

லாரியின் டயர் கழண்டுசென்று மோதியதில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்த 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான குமார். இவருக்கு 10 வயதில் கவியரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை சிறுவன் தனது பாட்டியுடன் அண்ணா நகரில் இருந்து பர்கூர் நோக்கி நடந்துசென்றுகொண்டிருந்தான்.

அப்போது அந்தவழியாக லோடு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் லாரியின் டயரின் ஆக்சில் திடீரென கட்டானது. இதனால் லாரியின் இரண்டு டயர்களும் தனியாக கழண்டு சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதில் ஒரு டயர் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவன் கவியரசன் மீது மோத, சிறுவன் கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து லாரி ட்ரைவர் லாரியை அங்கையே நிறுவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dead #News
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story