×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி மாணவியை மயக்கி, ஆசை வார்த்தை கூறி கேரளாவிற்கு அழைத்துச்சென்று இளைஞர் செய்த கொடூரம்!

young boy cheated school girl

Advertisement


கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை மயக்கி சீரழித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 19ம் தேதியன்று பள்ளி செல்வதாக கூறிவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.  மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது, அந்த மாணவி ராஜகுமார் என்ற இளைஞரிடம் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் அவர்களது செல்போனை ட்ராக் செய்து கேரளா மாநிலத்தில் இருப்பதாக காட்டியது. இதனையடுத்து ராஜகுமார் மற்றும் மாணவியை கண்டுபிடித்தனர்.

ராஜ்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஓராண்டாவாகவே விதவிதமான ஆடைகளில் பள்ளி முன்பாக சென்று மாணவியை மயக்கி காதல் வலையில் விழ வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார் ராஜ்குமார்.

இந்த நிலையில் பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து வருமாறு ராஜகுமார் கூறியுள்ளார். அதனை நம்பி அந்த மாணவியும், நகைகளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகுதான் மாணவிக்கு ராஜ்குமார் பற்றிய உண்மை தெரிந்தது. ராஜ்குமாரை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cheat #school girl
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story