×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

100 ரூபாய் சாக்லேட் கொடுத்து மாணவியுடன் உல்லாசம்! பெற்றோருக்கு தெரியாமல் 3 மாதம் கர்ப்பம்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.

100 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Advertisement

100 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுவந்தநிலையில் கடந்த 7 ஆம் தேதி தனது தாயாருடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

புகாரை அடுத்து அந்த சிறுமியை போலீசார் விசாரித்ததில், கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடன் 11 ஆம் வகுப்பு படித்த கோகுல கண்ணன் என்ற மாணவன்தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் எனவும், தனக்கு 100 ரூபாய் சாக்லேட் வாங்கிக்கொடுத்து தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த மாணவனின் தொலைபேசி எண்ணையும் அவர் போலீசாரிடம் கொடுத்துள்ளார். மாணவி கொடுத்த தொலைபேசி எண் பயன்பாட்டில் இல்லை என்பதை தெரிந்துகொண்ட போலீசார் அதனை அடுத்து அந்த மாணவி படித்த பள்ளியில் அவருடன் 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் லிஸ்டை எடுத்து பார்த்தபோது அதில் கோகுல கண்ணன் என்ற பெயரில் யாரும் படிக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் குழம்பிப்போன போலீசார் மீண்டும் அந்த மாணவியிடம் விசாரித்ததில், நான் சொன்ன அனைத்தும் பொய், தனது காதலனை காப்பற்றவே அப்படி கூறியதாகவும், உண்மையிலயே தனது கர்ப்பத்திற்கு காரணம் தன்னுடன் 9 ஆம் வகுப்பில் படித்த யுவராஜ்தான் என கூறியுள்ளார்.

௮ ஆம் வகுப்பு படிக்கும்போதே யுவராஜ் தன்னிடம் காதலை கூறியதாகவும், ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும், பின் யுவராஜ் அடிக்கடி தனக்கு 100 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்ததால் அவரது காதலை ஏற்றுக்கொண்டதாகவும், இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சிறுமி கூறிய யுவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Abuse
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story